Home நாடு கேஎப்சி பற்றி சர்ச்சைக்குரிய பதிவைச் செய்தது நான் அல்ல – அகமட் மஸ்லான்

கேஎப்சி பற்றி சர்ச்சைக்குரிய பதிவைச் செய்தது நான் அல்ல – அகமட் மஸ்லான்

677
0
SHARE
Ad

AHMAD_MASLAN_PC_141014_TMIAFIFRAIEZAL_01கோலாலம்பூர், ஜூலை 1 – மலேசியாவில் பொதுமக்கள் ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என்றால், எப்படி அடிக்கடி கேஎப்சி கடைகளுக்குச் சென்று உணவருந்த முடிகின்றது? எனத் துணை நிதியமைச்சர் டத்தோ அகமட் மஸ்லானின் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டிருந்த பதிவு பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.

kfcmaslan

இது குறித்து விளக்கமளித்துள்ள அகமட் மஸ்லான், ” தொடர்ச்சியாக மூன்று பொய்யான பதிவுகள் எனது பேஸ்புக்கில் செய்யப்பட்டுள்ளன. அதைச் சில விஷமிகள் தான் செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது. என்னுடைய பதவியைக் கூட அவர்கள் தவறாக எழுதியுள்ளார்கள். நான் இரண்டாவது நிதியமைச்சர் கிடையாது. நான் முதல் நிதியமைச்சர். பி1ஆர்எம் ( B1RM) என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அது பிஆர்1எம்( BR1M). அதே நேரத்தில், கேஎப்சி குறித்து நான் ஜூன் 1-ல் பதிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் கருத்தும் பொய்யானது.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice