Home உலகம் பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஜியோவை முடக்க ஐ.எஸ்.ஐ வலியுறுத்தல்!

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஜியோவை முடக்க ஐ.எஸ்.ஐ வலியுறுத்தல்!

439
0
SHARE
Ad

Geo TVஇஸ்லாமாபாத், ஏப்ரல் 24 – பாகிஸ்தானின் மிகப் பெரிய தொலைக்காட்சி சேனலான ஜியோவை முடக்கவேண்டும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தேசிய ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான பெம்ராவிற்கு வலியுறுத்தியுள்ளது.

ஜியோ டி.வியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் ஹமித் மிர், சமீபத்தில் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் நாட்டின் ஐ.எஸ்.ஐ என்ற உளவு நிறுவனமே இருந்தது என்று இந்தத் தொலைக்காட்சி குற்றம்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, தவறாகப் புரிந்துகொள்ளப் படக்கூடியது என்று ஐ.எஸ்.ஐ கூறியிருந்தது. ஜியோ டி.வியை முடக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை பாகிஸ்தானின் மக்கள் மற்றும் ராணுவத் தலைவர்களுக்கிடையே மோதல் போக்கை அதிகரிக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால், பாகிஸ்தானின் மின்னணு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான, பெம்ராவுக்கு தற்போது தலைவர் இல்லதா நிலையில், இது குறித்து முடிவெடுக்க அது சற்று கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்.