Home வாழ் நலம் பத்தே நாட்களில் உடல் எடையை குறைக்க சில வழிகள்!

பத்தே நாட்களில் உடல் எடையை குறைக்க சில வழிகள்!

916
0
SHARE
Ad

honore_Levesqueஆகஸ்ட் 23 – உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள்.

ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம். ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது.

எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை 10 நாட்கள் உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

#TamilSchoolmychoice

மேலும், வல்லுனர்களும் மற்ற வழிகளை விட, தண்ணீர் குடிப்பதை பின்பற்றினால் மிகவும் எளிமையாகவும், சீக்கிரமாகவும் எடையைக் குறைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

waterஇங்கு அப்படி 10 நாட்கள் பின்பற்ற வேண்டிய சில நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை பற்றி பார்ப்போம்.

1, முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

greentea,2, இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும். அத்துடன் இதனால் உடலில் உள்ள நச்சுக்களானது வெளியேற ஆரம்பிக்கும்.

3, அதைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும்.

4, நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க ஆரம்பிக்கும்.

chicken clear soup.preview5, ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.

6, ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பழச்சாற்றை குடித்து வர வேண்டும்.

orangejuice7, ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.

8, எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.

9, பொதுவாக மூலிகை நீரைப் பருகினால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவிடும். ஏனெனில் மூலிகைகளுக்கு அத்தகைய சக்தியானது உள்ளது. எனவே ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.

DSCN757810, எடையை குறைப்பதில் எலுமிச்சைச் சாற்று மிகவும் சிறந்த பானம். எனவே அத்தகைய எலுமிச்சை சாற்றை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.

குறிப்பு மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது பழங்களை எடுத்து வாருங்கள்.