Home இந்தியா தீர்ப்பு சாதகமாக கிடைக்க ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடா?

தீர்ப்பு சாதகமாக கிடைக்க ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு வழிபாடா?

501
0
SHARE
Ad

Jayalalithaa-சென்னை, செப்டம்பர் 23 – அமாவாசையை முன்னிட்டு இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 27-ம் தேதி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தும் விசயங்களில் கர்நாடக – தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தீர்ப்பை ஒட்டி பெங்களூரில் அதிமுகவினர் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள பெரும்பான்மையான தங்கும் விடுதிகளை அவர்கள் முன்கூட்டியே தங்குவதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று முதல்வர் ஜெயலலிதா மகாளய அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்ய உள்ளார் என அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இன்று காலை 3 மணியளாவிலேயே ஜெயலலிதா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரகசிய வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு வழிபாடு எனக் கூறப்படுகிறது.