Home நாடு சிலாங்கூரில் புதிய மந்திரி பெசார் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்!

சிலாங்கூரில் புதிய மந்திரி பெசார் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்!

457
0
SHARE
Ad

Azmin aliசிலாங்கூர், செப்டம்பர் 23 – சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக இன்று பதவி ஏற்ற அஸ்மின் அலி, அம்மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு உட்கட்சி பூசல்களோடு, தண்ணீர் பிரச்சனைகள், பைபிள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்திர தீர்வு காண அதிரடி நடவடிக்கைகள் எடுக்கவுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, எல்லா விவகாரங்களையும் மொத்தமாக தீர்வு காண முடியாது. எனினும் ஒரு சில பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காணலாம் என்றும் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

என்றாலும், எதிர்காலத்தில் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக சிலாங்கூர் தண்ணீர் குத்தகை பொதுவில் வைக்கப்படும் என்றும் அஸ்மின் அலி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அத்துடன் சர்ச்சைக்குரிய கின்ராரா – டாமன்சாரா நெடுஞ்சாலை (கிடாக்ஸ்) விவகாரத்திலும் அஸ்மின் அலியின் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.