Home இந்தியா ஜெயலலிதாவின் தண்டனைக்கு மகிழவில்லை… ஜாமீனுக்காக வருந்தவும் இல்லை – கருணாநிதி

ஜெயலலிதாவின் தண்டனைக்கு மகிழவில்லை… ஜாமீனுக்காக வருந்தவும் இல்லை – கருணாநிதி

480
0
SHARE
Ad

karunanidhiசென்னை, அக்டோபர் 20 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை: தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை” என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில், “ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று தீர்ப்பினை அளித்தார்.

அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

குன்காவின் தீர்ப்பு இதற்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சட்ட விதி முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா 1136 பக்கங்களில் விரிவான தமது தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து தீர்ப்பு முழுவதையும் கவனமாகப் படித்த பிறகு விளக்கலாம் என்று எண்ணினேன்.

மேலும் அ.தி.மு.க.வின் தலைவிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.

ஆனால் அ.தி.மு.க.வினர் சிலர் நான்தான் ஏதோ ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பதை திமுக தொண்டர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் தொடர் கடிதம் எழுதுகிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.