Home நாடு துணைத்தலைவர் நடத்திய கூட்டம் சட்டவிரோதமானது – பழனிவேல் அறிவிப்பு

துணைத்தலைவர் நடத்திய கூட்டம் சட்டவிரோதமானது – பழனிவேல் அறிவிப்பு

464
0
SHARE
Ad

MIC-President-Palanivel

கோலாலம்பூர், ஜனவரி 26 – கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பழனிவேல் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் கடந்த ஜனவரி 24-ம் தேதி கிராண்ட் செஷன்ஸ் தங்கும்விடுதியில் கூட்டம் நடைபெற்றதாக பத்திரிகைகளின் வாயிலாக அறிந்தேன். ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, நான் எந்த ஒரு மஇகா கூட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. என்னிடம் இக்கூட்டம் நடத்துவதற்காக யாரும் அனுமதி பெறவில்லை.”

“என்றாலும், என் அனுமதியின்றி இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு இந்த கூட்டம் சட்டவிரோதமாக நடந்துள்ளது. எனவே சட்டவிரோதமாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோ அல்லது பிரச்சனைக்கான தீர்வுகளோ சட்டப்படி செல்லாது மற்றும் அதற்கு எந்த ஒரு விளைவும் இல்லை.”

“இக்கூட்டத்தை நடத்தியவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருகின்றேன். ஏற்கனவே விளக்கமளித்திருந்தது போல், ஆர்ஓஎஸ் உடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றேன்” இவ்வாறு பழனிவேல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.