Home கலை உலகம் இணையத்தளத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!

இணையத்தளத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!

682
0
SHARE
Ad

maxresdefault (1)சென்னை, ஜனவரி 28 – இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் ‘பாகுபலி’.

ஏப்ரலில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடந்து வருகிறது.  இந்நிலையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். படத்தின் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்ட ஒருவர் தான் இதை இணையத்தில் வெளியிட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

rana-in-bahubaliஇதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் 2 வருட காலமாக பணியாற்றி பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது ‘பாகுபலி’.

இப்படம் திரையுலக ரசிகர்களை பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கிய படம். திடீரென படத்தின் 12 நிமிட காட்சிகள் வெளியானது படக்குழுவினரை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.