Home வாழ் நலம் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மிளகாய்!

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மிளகாய்!

2142
0
SHARE
Ad

chillieபிப்ரவரி 27 – மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். ஆனால், மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான மருத்துவப் பயன்களும் அடங்கியுள்ளன என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

சாதாரண சமையல் மிளகாய், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், சீனத்து மிளகாய், ஊசி மிளகாய், குண்டு மிளகாய் என மிளகாயில் பல வகைகளை உள்ளன.

அனைத்து மிளகாயின் இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. மிளகாயின் இலையிலேயும் மருத்துவ குணங்கள் மலிந்துள்ளன. இலைகள் சற்று கசப்பு சுவையுடையவை. இவை உஷ்ணத் தன்மையைப் பெற்றவை அல்ல.

#TamilSchoolmychoice

Paprikaமிளகாயில் ஒரு பெரிய இரசாயனப்பொடி பட்டியலே அடங்கி இருக்கிறது எனலாம். இவை அத்தனையுமே நோய் எதிர்ப்பு சக்தியைக் தருவதாகவும் ஆரோக்கியத்தினை அதிகரிக்கச் செய்வதாகவும் உதவுகின்றன.

மிளகாயில் கேப்ஸைசின் என்னும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இதுவே மிளகாய் காரமானதாகவும் சுவாசத்தில் எரிச்சலூட்டும் தன்மை உடையதாகவும் இருக்கின்றது. இந்த கேப்ஸைசின் என்னும் சத்து நுண்கிருமிகளை அழிக்க வல்லது.

புற்றுநோய் கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும், வலியைப் போக்கக் கூடியதாகவும், சர்க்கரை நோய்க்கு எதிரானதாகவும் விளங்குகிறது என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் இது எல்.டி.எல் என்று குறிக்கப்பெறும் கெட்ட கொழுப்புசத்தைக் குறைக்கக் கூடியது என்றும் தெரிவிக்கின்றது.

green-chilli7-600மிளகாயில் விட்டமின் சி சத்து அதிகமாக அடங்கியுள்ளது. விட்டமின் சி சத்து கொல்லாஜென் என்று சொல்லப்பெறும் உடல் ஆரோக்கியத்துக்கு வேண்டிய மிக முக்கியமான ஓர் சத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது.

திசுக்கள் ஆரோக்கியம் பெற்று இரத்த நாளங்கள், தோல் உட்சுரப்பிகள், எலும்புகள் ஆகியவை செம்மை பெற இந்த கொலாஜன் என்னும் சத்து உபயோகமாகின்றது.

chilliesவிட்டமின் சி செரிந்த உணவுப் பொருட்கள் தொற்று நோய்களைத் தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளுக்கு பலத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை குறிப்பாக புற்று நோய்க்கு காரணமாய் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

200 கிராம் மிளகாய் தூளோடு 100கிராம் மிளகுத் தூள் சேர்த்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து தைல பதமாகக் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை குளித்தால் அனைத்து விதான தலை வலிகளும் தீர்ந்து போகும்.