Home நாடு ஆர்ஓஎஸ் மீது மஇகா வழக்கு: மார்ச் 9-ம் தேதி செவிமெடுப்பு!

ஆர்ஓஎஸ் மீது மஇகா வழக்கு: மார்ச் 9-ம் தேதி செவிமெடுப்பு!

572
0
SHARE
Ad

MIC-President-Palanivelகோலாலம்பூர், மார்ச் 2 – மஇகா-வில் சில பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தக் கூறும் ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட, மூன்று மஇகா உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கு வரும் மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, இவ்வழக்கு அர்பைன் அண்ட் கோ என்ற சட்டத்துறை நிறுவனத்தால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மாபி முகமது முன்னிலையில் வரும் மார்ச் 9-ம் தேதி, இவ்வழக்கு செவிமெடுப்பு விசாரணைக்கு வருகின்றது.

#TamilSchoolmychoice