Home வாழ் நலம் தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!

தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!

1259
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_21189081669ஜூன் 27 – மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கியக் காரணம். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி.

மனப்பதற்றம் அதிகரிப்பதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். அதுவே தலைக்குள் பரவி வலியை உண்டாக்குகிறது. வலி நிவாரண மாத்திரைகளைக் காட்டிலும் பதற்றமான மனநிலையைத் தவிர்ப்பதே தலைவலிக்கான தீர்வாகும்.

தலைவலி ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

#TamilSchoolmychoice

அதீத பசியும் தலைவலியைத் தூண்டும். சூடான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடலின்  நீர்ச்சத்து குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கல் உப்பு, 2 கிராப்பை எடுத்துச் சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொண்டால் தலைவலியின் கடுமை குறையும். ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

coconut-oil 2சூடான பசும்பால் குடிக்க தலைவலி குறையும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டையைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துப் பசை போலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல் தடவலாம்.

சந்தனக்கட்டையைச் சிறிது தண்ணீர் விட்டுப் பசை போல் அரைத்து அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவதிப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.