Home Featured நாடு தேசிய மிருகக் காட்சி சாலையில் பாண்டா ‘லியாங் லியாங்’ குட்டியை ஈன்றது!

தேசிய மிருகக் காட்சி சாலையில் பாண்டா ‘லியாங் லியாங்’ குட்டியை ஈன்றது!

844
0
SHARE
Ad

liangliangzoo

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – ஒரு மகிழ்ச்சியான செய்தி.. நமக்கு குட்டி பாண்டா கரடி கிடைத்துவிட்டது.

ஆம்.. சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேசிய மிருகக் காட்சி சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் பாண்டா கரடியான லயாங் லயாங் இன்று மதியம் 1.45 மணியளவில் குட்டியை ஈன்றது.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது அதிகாரப்பூர்வ நட்பு ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மலேசியா – சீனா இடையிலான 40 ஆண்டு கால நல்லுறவை வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு பாண்டா கரடிகள் சீனாவில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2012 – ம் ஆண்டு சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, இந்த இரண்டு பெரிய வகை பாண்டா கரடிகளையும் 10 ஆண்டுகள் பராமரிக்கும் வாய்ப்பை மலேசியா பெற்றது.