Home Featured நாடு மெலாக்கா ராயாவில் பேரணி நடத்துவது ஆபத்து – அலி டிஞ்சு எச்சரிக்கை

மெலாக்கா ராயாவில் பேரணி நடத்துவது ஆபத்து – அலி டிஞ்சு எச்சரிக்கை

485
0
SHARE
Ad

Ali Tinjuகோலாலம்பூர் – வரும் அக்டோபர் 10-ம் தேதி, சனிக்கிழமை, மலாக்காவிலுள்ள தாமான் மெலாக்கா ராயா என்ற பகுதியில் பேரணி நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் மலாய் மூத்த இராணுவப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மொஹமட் அலி பஹாரோம் கூறுகையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி, குடிநுழைவுத்துறை அதிகாரிகளுடன் ‘சீன குண்டர்கள்’ தாக்கியதை சம்பவத்தை முன்வைத்தே தான் இதைக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலைக் கண்டிக்கவே இப்பேரணி நடத்தப்படவுள்ள நிலையில், மொஹமட் அலி என்ற அலி டிஞ்சு, “அந்த நாளில் மெலாக்கா ராயா பாதுகாப்பானது கிடையாது” என்று எச்சரிக்கிறார்.

#TamilSchoolmychoice

அதற்காகத் தான் நிச்சயமாக கலவரம் வெடிக்கும் என்று கூறவில்லை எனக் குறிப்பிடும் மொஹமட் அலி, முன் ஏற்பாடுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி மெலாக்கா ராயாவில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில், சோதனை மேற்கொண்ட 19 குடிநுழைவு அதிகாரிகளை சுமார் 40-க்கும் மேற்பட்ட குண்டர்கள் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.