Home Featured நாடு நியூசிலாந்து பெண் பலாத்கார வழக்கு: ரிசல்மான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

நியூசிலாந்து பெண் பலாத்கார வழக்கு: ரிசல்மான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது!

453
0
SHARE
Ad

Muhammad Rizalman Ismailகோலாலம்பூர் – பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நியூசிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிசல்மானின் மீதான குற்றம் இன்று நிரூபிக்கப்பட்டது.

நியூசிலாந்தைச் சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்றில் (stuff.co.nz) வெலிங்டன் உயர்நீதிமன்றத்தில் இன்று காலை, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொத்தம் அவர் மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளில் இரண்டு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டார் என கடந்த ஆண்டு மே 10-ம் தேதி, நியூசிலாந்து அதிகாரிகளால் ரிசல்மான் (வயது 39) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice