Home Featured வணிகம் அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் நிர்வாகியாயிருக்கிறார் சுந்தர் பிச்சை!

அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் நிர்வாகியாயிருக்கிறார் சுந்தர் பிச்சை!

894
0
SHARE
Ad

sundarசென்னை – அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெயரை கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அடைந்திருக்கிறார்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சுந்தருக்கு, 273,328 ஆல்ஃபா பங்குகளைத் தந்துள்ளது.

அதன் மதிப்பு 199 மில்லியன் டாலர்கள் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.