Home Featured நாடு பொந்தியான் திமிங்கிலம் இறந்த நிலையில் பத்து பகாட்டில் கரை ஒதுங்கியது!

பொந்தியான் திமிங்கிலம் இறந்த நிலையில் பத்து பகாட்டில் கரை ஒதுங்கியது!

517
0
SHARE
Ad

whaleபத்து பகாட் – இரண்டு நாட்களுக்கு முன்னர் பொந்தியானில் கரை ஒதுங்கி பின்னர் மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களால் கடலுக்குள் திருப்பி விடப்பட்ட திமிங்கிலம், இன்று பத்து பகாட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

தடவியல் நிபுணர்களின் சோதனை மூலமாக அது பொந்தியானில் காணப்பட்ட திமிங்கிலம் தான் என்பது உறுதியாகியுள்ளதாக ஜோகூர் மீன்வளத்துறை இயக்குநர் முனிர் மொகமட் நாவி தெரிவித்துள்ளார்.

அத்திமிங்கிலம் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய தற்போது பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice