Home Featured கலையுலகம் தேசிய விருது மீது அதிருப்தி ஏன்? – இளையராஜா விளக்கம்!

தேசிய விருது மீது அதிருப்தி ஏன்? – இளையராஜா விளக்கம்!

668
0
SHARE
Ad

ilayarajaசென்னை – இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிக்க தேவை என்ன இருக்கிறது என இசையமைப்பாளர் இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 63-ஆவது தேசிய விருதுகளை வழங்கினார். ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த விருதினை பெற்றுக்கொள்ள இளையராஜா செல்லவில்லை. இது குறித்து திருவண்ணாமலை ஸ்ரீ ரமண ஆசிரமத்தில் இருந்து இளையராஜா அளித்த பேட்டியில், “கடந்த 2010-ஆம் ஆண்டு வரை சிறந்த இசையமைப்புக்கான தேசிய விருது என்று ஒரு பிரிவு மட்டுமே இருந்தது.

#TamilSchoolmychoice

சாகர சங்கமம், சிந்து பைரவி, ருத்ர வீணா போன்ற படங்களுக்காக சிறந்த இசையமைப்புக்கான விருதினை நான் பெற்றிருக்கிறேன். அந்த நடைமுறையை மாற்றி சிறந்த இசையமைப்பு (பாடல்), சிறந்த பின்னணி இசையமைப்பு என இரு பிரிவுகளில் தற்போது தேசிய விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு எனக்கு சிறந்த பின்னணி இசைக்கும், ஜெயச்சந்திரனுக்கு சிறந்த இசையமைப்புக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி இசைக்கான விருதை இரண்டாக பிரித்துள்ளது, நான் ஏதோ பாதி வேலையை மட்டுமே சிறப்பாக செய்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த இசையமைப்பு (பாடல்) என பிரிக்க தேவை என்ன இருக்கிறது? ஒருவேளை தேசிய விருது வழங்கும் குழு இசையமைப்பாளர்கள் பாதி வேலையை மட்டும் சிறப்பாக செய்தால் போதும் என்பதை ஊக்குவிக்கிறதா?” என்றார்.