Home Featured நாடு புதிய எம்ஏசிசி தலைமை ஆணையராக சுல்கிப்ளி அகமட் நியமனம்!

புதிய எம்ஏசிசி தலைமை ஆணையராக சுல்கிப்ளி அகமட் நியமனம்!

671
0
SHARE
Ad

MACCகோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோ சுல்கிப்ளி அகமட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அரசு அதிகாரியான சுல்கிப்ளி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில், தேசிய வருவாய் மீட்பு அமலாக்கப் குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் நடப்பு ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமட் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியோடு, பதவி விலகுவதால், அவருக்குப் பதிலாக சுல்கிப்ளி அகமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரையில், சுல்கிப்ளி இப்பதவியை வகிப்பார் என அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா அறிவித்துள்ளார்.