Home Featured தொழில் நுட்பம் “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

1200
0
SHARE
Ad

Tamil

பாரிட் புந்தார் – நாளை ஞாயிற்றுக்கிழமை (31 ஜூலை 2016) மாலை மணி 4.00 மணிக்கு பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ள “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கும் முத்து நெடுமாறன், செல்லியல் குறுஞ்செயலி தகவல் ஊடகத் தளத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நவீன, தொழில் நுட்ப அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்குவார்.

முத்து நெடுமாறன் செல்லியல் குறுஞ்செயலியின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் ஆவார். செல்லினம் தமிழ் உள்ளீடு குறுஞ்செயலியின் உருவாக்குநரான, முத்து நெடுமாறன் ‘முரசு அஞ்சல்’ மென்பொருளின் உருவாக்குநரும் ஆவார்.

#TamilSchoolmychoice

Selliyal Logo 440 x 215மலேசியாவில் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் செல்பேசி குறுஞ்செயலியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே தகவல் ஊடகத் தளமான செல்லியல், உலகம் எங்கும் உள்ள வாசகர்களுக்கு, புதிய வாசிப்பு அனுபவங்களை குறுஞ்செயலி மூலம் தொடர்ந்து வழங்கி வருகின்றது. மற்ற தமிழ் குறுஞ்செயலிகளில் இல்லாத அளவுக்கு புதிய, நவீன அம்சங்களையும் புகுத்தி வருகின்றது.

தமிழ் வாழ்வியல் இயக்கம், “தமிழ்க் கோட்டம்” என்ற பெயரில் நிர்மாணிக்கவிருக்கும் 3 மாடிகள் கொண்ட கட்டிடத்திற்கு நிதி திரட்டும் வகையில் ‘தமிழ்க் கோட்டமும் தமிழ்க்கணிமையும்’ எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கும் முத்து நெடுமாறன் அண்மையில் செல்லியல் குறுஞ்செயலியில் இணைக்கப்பட்டுள்ள சில புதிய, நவீன அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்குவார்.

MuthuNedumaranமேலும், கணினி தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்மொழி எந்த அளவுக்கு தனது ஆளுமையைப் பதித்துள்ளது, தமிழில் தகவல் தொழில்நுட்பம் அடைந்துள்ள ஆகக் கடைசியான வளர்ச்சிகள், தமிழ்மொழியின் எதிர்கால வெல்விளிகள் (சவால்), புதிய திறன்கருவிகள், தட்டைக் கருவிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுதல் முதலான கோணங்களில் அவருடைய உரை அமையவுள்ளது. நேரடியான செய்முறை பயிற்சிகளும் வழங்கப்படும்.

எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க தமிழ் அன்பர்கள், தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள், தமிழ் ஆசிரியர்கள், இளையோர்கள் அனைவரும் கலந்து பயன்பெற அன்போடு அழைக்கப்படுகின்றார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக மேல் விவரங்கள் பெறுவதற்கு கீழ்க்காண்பவர்களைத் தொடர்பு கொள்ளலாம்:-

க.முருகையன் (012-4287965)

ம.தமிழ்ச்செல்வன் (013-4392016)

சுப.நற்குணன் (012-4643401)

கோவி.சந்திரன் (013-5034981)

அல்லது தமிழ்க் கோட்டம் இணையத் தளத்திற்குச் சென்று விவரங்கள் பெறலாம்.

தமிழ்க் கோட்டம் இணையத்தள முகவரி http://tamilkottam.blogspot.com