Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த தகவலை வெளியிட முடியாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த தகவலை வெளியிட முடியாது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

534
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி, மருத்துவர் பிரவீணா என்பவர் தொடுத்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்துள்ளது.

முதல்வருக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்ற தகவலை வெளியிட வேண்டும் என அனைவரும் கோர முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.