Home Featured தமிழ் நாடு அம்மா சமாதியில் ‘அம்மா பிரசாதம்’

அம்மா சமாதியில் ‘அம்மா பிரசாதம்’

596
0
SHARE
Ad

jayalalitha845456-10-1481353880சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அஞ்சலி என்பதைக் கடந்து கிட்டத்தட்ட பக்தி என்ற நிலைக்கு தற்போது மாறிவிட்டது. காரணம், அம்மா சமாதிக்கு வந்து மொட்டையடித்துக் கொள்வது, திருமணம் செய்வது என பல சடங்குகள் அங்கு அரங்கேறி வருகின்றன.

அப்படி வரும் மக்களுக்கு அங்கு ‘அம்மா பிரசாதம்’ என்ற பெயரில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள பிரபல உணவகங்களில் இருந்து அந்த உணவு தினமும் அங்கு கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவின் படி, அங்கு உணவுகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.