Home Featured நாடு கனடாவில் 24 ஆண்டுகள் சிறையில் இருந்த செல்வக்குமார் மலேசியா திரும்புகிறார்!

கனடாவில் 24 ஆண்டுகள் சிறையில் இருந்த செல்வக்குமார் மலேசியா திரும்புகிறார்!

1147
0
SHARE
Ad
கோலாலம்பூர் – கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை அடுத்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார்

இந்நிலையில், செல்வக்குமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார்.

subbiahகனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜனவரி 29-ம் தேதியோடு, அவரது சிறைத் தண்டனைக் காலம் நிறைவடைவதையடுத்து, செல்வக்குமார் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.