Home Featured நாடு கிள்ளான் விண்வெளிக் கலைமன்ற ஏற்பாட்டில் ‘பொங்கலோ பொங்கல் 2017’

கிள்ளான் விண்வெளிக் கலைமன்ற ஏற்பாட்டில் ‘பொங்கலோ பொங்கல் 2017’

817
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் ஏற்பாட்டில் ‘பொங்கலோ பொங்கல் 2017’ என்ற நிகழ்ச்சி இன்று 21 ஜனவரி 2017, சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் துங்கு கிளானா நகராண்மைக் கழக அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

WhatsApp Image 2017-01-21 at 12.44.56 PMஆடல், பாடல், குறுநாடகம், பொங்கல் சிறப்புரை எனப் பல பண்பாட்டு அங்கங்களோடு முத்தமிழ் சுவை கொண்ட இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய உடையில் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமை வகிக்கும் இந்நிகழ்ச்சியில், ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர் சுபாஷினி சிறப்புரையாற்றுகின்றார்.

#TamilSchoolmychoice