Home Featured கலையுலகம் முந்தானை முடிச்சு ‘தவக்களை’ காலமானார்!

முந்தானை முடிச்சு ‘தவக்களை’ காலமானார்!

815
0
SHARE
Ad

thavakkalai-munthanai mudichu-2சென்னை – 1983-ஆம் ஆண்டில் வெளிவந்து உலகம் எங்கிலும் வெற்றிக் கொடி நாட்டிய படம் பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த முந்தானை முடிச்சு. அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற ‘தவக்களை’ என்ற நடிகர் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 42.

முந்தானை முடிச்சு படத்தின் ஆரம்பக் காட்சிகளில், ஊருக்குள் முதன் முதலாக வரும் பாக்கியராஜின் பெட்டியிலிருந்து அவரது கைக்குழந்தையின் பால்போத்தலைத் திருடிக் குடிக்கும் காட்சியிலிருந்து, படம் முழுக்க தனது வித்தியாசமான தோற்றத்தாலும், நகைச்சுவை நடிப்பாலும் அசத்தியிருந்தார் தவக்களை.

#TamilSchoolmychoice

அந்தப் படத்தில் அடிக்கடி ‘பரிமளம்…பரிமளம்…’ என கதாநாயகி ஊர்வசியை அழைத்து இரசிகர்களைச் சிரிக்க வைத்த தவக்களை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களிலும், தென்னிந்தியப் படங்களிலும் நடித்தார்.

thavakkalai-munthanai mudichuமுந்தானை முடிச்சு படத்தில் பள்ளி மாணவனாக (நடுவில் இருப்பவர்) நடித்த தவக்களை…