Home Featured உலகம் சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா 2017 – கோலாகலமாகத் தொடங்கியது!

சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா 2017 – கோலாகலமாகத் தொடங்கியது!

723
0
SHARE
Ad

சிங்கப்பூர் – ‘தமிழை நேசிப்போம் – தமிழில் பேசுவோம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த தலைமுறையும் இனிய தமிழில் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக, ‘தமிழ் மொழி விழா’ நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் படி, 2017-ம் ஆண்டிற்கான ‘தமிழ் மொழி விழா’ மீடியாகார்ப் வளாகத்தின் எம்ஈஎஸ் அரங்கில் கோலாகலமாகத் துவங்கப்பட்டது. இம்மாதம் முழுவதும் தமிழ்சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.

Tamilmozhi 01042017வளர் தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு மற்றும் வசந்தம் ஒளிவழி, ஒலி 96.8 வானொலி ஆகியவை இணைந்து நடத்தும் இவ்விழாவில், சிங்கையைச் சேர்ந்த சுமார் 45 அமைப்புகளும், 4 உயர்கல்வி நிலையங்களும் இணைந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

“தமிழோடு இணைவோம்” என்ற தொடக்க விழா ஆடல், பாடலுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவரும் செம்பாவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரையில், இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் அரங்கேறவிருப்பது குறிப்பிடத்தக்கது.