Home Featured நாடு ஊழல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் சிஐடி கூ சின் வா விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் சிஐடி கூ சின் வா விடுதலை!

762
0
SHARE
Ad

ku-chin-wahகோலாலம்பூர் – கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வருமானம் வந்த வழிகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட, 59 வயதான முன்னாள் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை மூத்த உதவி ஆணையர் டத்தோ கூ சின் வா, தற்போது குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலையானார்.

“தனது வருமானம் குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் மறைக்கும் நோக்கம் அவருக்கு இருந்திருக்கவில்லை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விண்ணப்ப பாரத்தை குற்றம் சாட்டப்பட்டவர் முறையாக நிரப்பியிருக்கிறார்” என்று நீதிபதி சோஹைனி அலியாஸ் கூறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி, சட்டப்பிரிவு 49(3)-ன் கீழ், கூ தனது வந்த வருமானம் குறித்து ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

இக்குற்றத்தை அவர், கடந்த 2013-ம் ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து 2014-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி வரைக்குள் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டியது ஊழல் ஒழிப்பு ஆணையம்.