வாழ்கிறது ஜீவனோடு………
கட்டற்ற காதலில்
மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்.......
கண்களால் களவு செய்து
உயிர்களை மாற்றி கொண்டோம்......
உணர்வுகளை உள்ளுக்குள்
விதைத்து கொண்டோம்........
உயிரோடு புதைத்து
கொண்டோம்.............
கடமைகள் அழைக்க
கண்ணியமாய் விலகி
கொண்டோம்............
காலமெனும் விவசாயி
ஒரே களத்தில் இருந்த
நம்மை பிரித்து
வெவ்வேறு
சூழலில் நட்டான் ....
புரிதலோடு பிரிந்து
கொண்டோம் ….
ஒரு சூழலில் நண்பனின்
திருமணத்தில்
சந்த்திதோம் ....
நலம்...
நீங்களாவது நேசியுங்கள்
நானும் ஒரு கவிஞன்
நயமற்ற நகைகளால்
நாணலாக சாய்ந்து கிடக்கிறேன்
தீக்குள் குளித்த பூங்குளலாக
என் கவிச்சுருதி
நாதமற்று இசைக்கிறது
சூரிய ஒளியால்
சுவாசிக்கப்பட்ட நீராக என்
சுந்தர வார்த்தைகள்
சுவையற்று வறண்டுவிட்டன
கடும் மழையில்கரைந்து போன
காக்கை கூடாக
சின்னா பின்னமாய் என் சிந்தனைகள்
உம் விளித்திரைகளுக்குள்
என் மொழித்திரை
அமிலத்தில் சோதிக்கப்பட்டு
காரமின்றி...
இறக்கைகள் முளைக்கும் தருணம்.
அழைத்துச் செல்லவந்த
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
பள்ளியில் நடந்த கதைகளை
மழலையில் குழந்தைக் கூறிவர
தோளிரண்டில் தோன்றின இறக்கைகள்.
வான்வழியே விரைவாக வீட்டை
வந்தடைந்தாள் தாய்.