Home தொழில் நுட்பம் செப்டம்பர் 30-ல் விண்டோஸ் 9-ஐ வெளியிட மைக்ரோசாஃப்ட் முயற்சி!

செப்டம்பர் 30-ல் விண்டோஸ் 9-ஐ வெளியிட மைக்ரோசாஃப்ட் முயற்சி!

463
0
SHARE
Ad

2a76acf7கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 9-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

தொழில்நுட்பங்களின் முன்னோடியாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளத்திற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்ற இயங்குதளங்களைக் காட்டிலும் மாபெரும் எதிர்பார்ப்பும், வர்த்தகமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிதானது.

எனினும் கடைசியாக வெளியான விண்டோஸ் 8-ற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தும், அந்த இயங்குதளம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாததால் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.

#TamilSchoolmychoice

windows9இந்நிலையில், தனது அடுத்த வெளியீட்டை வெற்றிகரமானதாக உருவாக்க முயன்று வரும் மைக்ரோசாஃப்ட், பல புதிய மாற்றங்களை செய்து  விண்டோஸ் 9-ஐ உருவாக்கி வருவதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறுகின்றன.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எதிர் வரும் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருப்பதாகவும், அந்த நிகழ்வின் போது விண்டோஸ் 9 அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியின் போது, பேசும் செயலியான கார்டனாவும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.