Home இந்தியா ஜப்பான் உறவில் புதிய அத்தியாயம் உருவாகும் – மோடி

ஜப்பான் உறவில் புதிய அத்தியாயம் உருவாகும் – மோடி

403
0
SHARE
Ad

Narendra_Modiடெல்லி, ஆகஸ்ட் 30 – பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.

ஜப்பானில் உள்ள கியாடோ நகருக்கு முதலில் சென்ற மோடிக்கு ஜப்பான் பிரதமர் விருந்தளித்தார். பின்னர் தலைநகர் டோக்யோ சென்ற மோடிக்கு, அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை அடிப்படையில் இருதரப்பு நாடுகளிடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, சிவில், அணுசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுதிடப்பட்டன.

#TamilSchoolmychoice

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. தமது பயணம் பற்றி அறிக்கை வெளியிட்ட மோடி, ‘இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் உருவாகும், இரு நாடுகளிடையே வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, சிவில், அணுசக்தி உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.