Home நாடு சங்கப்பதிவக உத்தரவுகளுக்கு எதிரான பழனிவேல் குழுவினரின் மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 13-இல்!

சங்கப்பதிவக உத்தரவுகளுக்கு எதிரான பழனிவேல் குழுவினரின் மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 13-இல்!

465
0
SHARE
Ad

MICகோலாலம்பூர், ஜூன் 30 – சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அங்கீகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட 5 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 13-ம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) விசாரணைக்கு வருகின்றது.

எதிர்வரும் ஜூலை 7-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவுஸ் ஷாரிஃப் இன்று உத்தரவிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice