கோலாலம்பூர் – வழக்கமாக மஇகா மற்றும் சில அரசியல் கட்சிகளின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புகளுக்கு மட்டும் வருகை தரும் பிரதமர் நஜிப் துன் ரசாக், இந்த ஒரு வித்தியாச அணுகுமுறையாக, சமூக இயக்கங்களின் வழி தீவிர சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி இலட்சுமியின் இல்லத்திற்கு வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து சொன்னார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டிற்கு தான் வருகை தந்ததாகவும் பிரதமர் தனது டுவிட்டர், பேஸ்புக் வலைத் தளங்களில் தெரிவித்திருந்தார்.
இலட்சுமியின் சமூகப் பங்களிப்பைத் தான் பெரிதும் மதிப்பதாகவும், தான் பெற்ற அரசாங்க உதவிகளுக்குப் பதிலாக சமூகத்தில் அரசாங்க உதவிகள் தேவைப்படும் மற்ற பெண்களின் குடும்பத்திற்கு ஆலோசனைகளும், உதவிகளும் வழங்க முன்வந்திருக்கும் இலட்சுமியின் அர்ப்பண உணர்வை மதித்தே, அவருக்கு இல்லத்திற்கு வருகை தர, தான் முடிவு செய்ததாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.
-செல்லியல் தொகுப்பு