Home Featured தமிழ் நாடு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தேர்தல் ஒத்தி வைப்பு! மே 23ஆம் தேதி நடைபெறும்!

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதித் தேர்தல் ஒத்தி வைப்பு! மே 23ஆம் தேதி நடைபெறும்!

784
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கரூர் – அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலை தமிழகத் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தொகுதியில் ஏராளமான பண விநியோகம் குறித்த புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கான தேர்தல் மே 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 25ஆம் தேதி நடைபெறும்.

இதன் காரணமாக, எதிர்வரும் மே 16ஆம் நாள் தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.