Home Featured நாடு “டான்ஸ்ரீ” – வங்கித் தலைவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

“டான்ஸ்ரீ” – வங்கித் தலைவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

660
0
SHARE
Ad

MACC

கோலாலம்பூர் – ‘டான்ஸ்ரீ’ அந்தஸ்து கொண்ட மலேசிய வங்கியின் தலைவர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.

15 மில்லியன் ரிங்கிட் செலவில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கும் விவகாரம் தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாக இயக்குநரான டத்தோ ஒருவரும் இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அந்த வங்கித் தலைவர் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அவரது வங்கி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.