Home Featured உலகம் பாகிஸ்தான் விமான விபத்து : அனைவரும் உயிரிழந்தனர்!

பாகிஸ்தான் விமான விபத்து : அனைவரும் உயிரிழந்தனர்!

832
0
SHARE
Ad

pakistan-airlines-atr-42-model-plane

இஸ்லாமாபாத் – நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 47 பேரும் உயிரிழந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தில் மேலே காண்பது விழுந்து நொறுங்கிய விமானத்தின் மாதிரிகளில் ஒன்றாகும்.

நேற்று விமான விபத்து நிகழ்ந்தது முதல் அதில் பயணம் செய்தவர்கள் 47 பேரா, அல்லது 48 பேரா என்ற குழப்பம் நிலவியது. தற்போது பாகிஸ்தான் இண்டர்நேஷனல் விமான நிறுவனம் தனது இணையத் தளத்தில் பயணம் செய்தவர்ககள் 47 பேர் என்றும் அதில் பயணிகள் 42 பேர், பணியாளர்கள் 5 பேர் என உறுதிப் படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 46 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையோர் பாகிஸ்தானியர்கள். 2 ஆஸ்திரியர்களும், ஒரு சீன நாட்டவரும் அதில் அடங்குவர்.

நேற்று மாலை பாகிஸ்தான் நேரப்படி 4.40 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போட்டாபாட் என்ற இடத்திற்கு அருகிலுள்ள மலைப்பிரதேசத்தில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

சிட்ரல் என்ற நகரிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்த பிகே 661 (PK 661) என்ற வழித்தடம் கொண்ட இந்த விமானம் பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. ஆனால், பிற்பகல் 4.30 மணியளவில் ராடார் கருவியின் பார்வையிலிருந்து மறைந்தது.

pakistan-junaid-jamshed-singer-died

பாகிஸ்தானின் பிரபல பாடகரும், இஸ்லாமிய மத போதகராக மாறியிருப்பவருமான ஜூனாயிட் ஜாம்ஷெட் (படம்) என்பவரும் இந்த விமானத்தில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்ரல் என்ற நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜூனாயிட் அந்தப் பிரதேசம் மிக அழகானது என்று வர்ணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தைக் கீழே காணலாம்.

pakistan-international-crash-singer-died
விமான விபத்தில் உயிரிழந்த பாடகர் ஜூனாயிட் (வலது) தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியிருந்த அவரது படம்.